மெல்லிய பூவின்மடியில் மற்றொரு பூஅள்ளி அணைத்ததில் காட்டியது தாயன்புஎன்னை மெய்சிலிர்க்க வைத்தது அரவணைப்பு...உன்னை காண்கையில் எனக்கொரு பூரிப்புஉன்னை கண்டதும் மனதில் தோன்றியது மதிப்புஉன்னை வார்த்தையில் வர்ணிப்பது எனக்கும் சிறப்பு..அன்பிற்குண்டோ அடைக்கும் தாழ்......?என் உள்ளத்திலிருக்கும் அன்பிடம் உன் நினைவுகளைஅடை காக்கும் கதவுகளுக்கானதாழ்தான் இருக்கிறது.கனவாக..காற்றாக..வெயிலாக..துயிலாக..இரவாக..பகலாக..எதிலும் - உன் நினைவாகஇருக்கச் செய்தவனே..உன்னில் மட்டும் - நான்கானலாக இருப்பது ஏன்?
No comments:
Post a Comment